• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கும்பாபிஷேக விழாவிற்கு ரூ20ஆயிரம் நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர்..,

ByK Kaliraj

Dec 7, 2025

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா குருந்தமடம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தேவி ஸ்ரீபத்திரகாளியம்மன் திருக்கோவில். உள்ளது..

இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வருகை தருமாறு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜியிடம் திருப்பணிக்கமிட்டியினர் அழைப்பிதழ் வழங்கினார்கள்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்வதாக தெரிவித்து
கும்பாபிஷேக விழாவிற்கு* ரூ20ஆயிரம் நிதியுதவி* வழங்கினார். இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.