மதுரை எல் கே பி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் சிறார் திரைப்படம் மல்லி தமிழக அரசின் உத்தரவின்படி திரையிடப்பட்டது. சிறார் திரைப்பட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை அனுசியா மல்லி திரைப்பட சுருக்கத்தினை எடுத்துரைத்தார். படம் திரையிடப்பட்டது.
திரைப்பட முடிவில் திரைப்படம் குறித்து சிடார் மைய ஒருங்கிணைப்பாளர் பாலகார்த்திகேயன் குழந்தைகள் குறும்பட இயக்குனர்கள் பஷீர்கான், பொன்குன்றம், எடிட்டர் சிவவைரவ பாலாஜி, சினிமோட்டோகிராபர் கார்த்திக் ஆகியோர் குழந்தைகளிடம் உரையாடினர். குழந்தைகள் படங்கள் எடுக்கும் முறை, டப்பிங், இசை, வசனம் எழுதுதல், நடித்தல், இயக்குதல், காட்சி அமைப்பு, இடங்களை தேர்வு செய்யும் முறை ஆகியன குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். வினாடி வினா நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ராஜவடிவேல், விஜயலட்சுமி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாணவ, மாணவிகள், திரைப்பட ஆர்வலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்..