குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பொதுவுடமை சிற்பி ஜீவானந்தம். பொது வாழ்க்கையில் பல தியாகங்கள் புரிந்த பொதுவுடமை கட்சி தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ் கலாச்சாரம் மற்றும் கட்சியை வளர்த்தவர்.
இவருடைய 115வது பிறந்தநாள் இன்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மணிமண்டபத்தில் நடைபெற்றது. ஜீவனைந்தத்தின் திரு உருவ சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட வருவாய்துறை அதிகாரி ரேவதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.