• Wed. Apr 24th, 2024

ஈரோடு – எலத்தூர் பேரூராட்சியில் ஜெயலலிதாவின் நினைவு தினம்

ஈரோடு அருகேயுள்ள எலத்தூர் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.அதே போல ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எலத்தூர் பேரூராட்சி அதிமுக செயலாளர் சேரன் சரவணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவிமரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *