உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் இடம்பெற வைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உளவுத் துறையிடம் சீக்ரெட் சர்வே ரிப்போர்ட் கேட்டுப் பெற்றுளதாக தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரத்தைப் பரபரப்பாக்கியுள்ளது
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குங்கள் என்று முதல் குரல் கொடுத்தது, அவரது நண்பரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தான். அவர்தான் முதன்முதலாக பொதுவெளியில் இது தொடர்பான விவாதத்தை தொடங்கி வைத்தார். அதைப் பின்தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் முதல் அமைச்சரவைக்கு புதிதாக சென்றவர்கள் வரை உதயநிதியை அமைச்சராக்குமாறு பேட்டியளிக்கத் தொடங்கினர். உதயநிதிக்கு எந்த துறை வழங்கப்படும், எப்போது வழங்கப்படும் என்ற கேள்விகள் சுழன்று வந்தன.
உதயநிதி கமிட்டாகியிருக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை முடித்த பின்னர் பதவியேற்க சொல்லலாம் என்று முதல்வர் ஸ்டாலினும் கூறிவந்ததாக சொல்லப்பட்டது. மே அல்லது ஜூன் மாதம் பதவியேற்பு இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் திட்டமிட்டபடி உதயநிதி திரைப்படங்களின் படப்பிடிப்பு இன்னும் முடிந்தபாடில்லை.
இதற்கிடையே உதயநிதியை அமைச்சராக்குவது தொடர்பாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய நினைத்த ஸ்டாலின் உளவுத்துறையிடம் கூறி ஒரு சீக்ரெட் சர்வே எடுக்க சொல்லியுள்ளார். அதன் முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளன. உதயநிதியை அமைச்சராக்கினால் ஸ்டாலின் தனது குடும்பத்துக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்று மக்கள் நினைப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.
ஸ்டாலின் எந்த முக்கிய முடிவெடுக்க வேண்டும் என்றாலும் தனது ஆலோசகர்கள் சிலரிடம் ஒரு வார்த்தை கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் அவர்களிடம் கேட்டதற்கும் எதிர்மறையான கருத்துக்களே வந்துள்ளன. திமுக மீது வழக்கமாக முன்வைக்கும் வாரிசு அரசியல் விமர்சனத்தை எதிர்கட்சிகள் தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கிவிடுவார்கள். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட இல்லாத நிலையில் அதற்கு வழியமைத்து கொடுத்துவிடக்கூடாது. கட்சிக்குள்ளும் தேவையற்ற கலகங்களை உருவாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதுஒரு புறமிருக்க ஸ்டாலின் தனது குடும்பத்திலிருந்து இதுதொடர்பாக அழுத்தத்தையும் சந்திப்பதாக சொல்கிறார்கள். ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் ஏன் இன்னும் அமைச்சரவையில் இடம் தரமறுக்கிறீர்கள்? இந்த விவகாரம் தொடர்பாக நிறைய விவாதங்கள் பொதுவெளியில் நடைபெற்று முடிந்துவிட்டன. அனைத்து தரப்புமே உதயநிதி பதவியேற்பு எப்போது என எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் இனி எதிர்ப்பு இருக்காது என குடும்பத்தினர் வலியுறுத்திவருகிறார்கள். அனைத்து தரப்பு கருத்துக்களை கேட்ட முதல்வர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- சிவகாசி அருகே பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி பங்கேற்புவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சல்வார்பட்டி, ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையம் […]
- பெண்கள் காவல்துறையின் பொன்விழா சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவுதமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பொன் விழாவாக […]
- சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் மூன்று மாதம் கொடியேற்றம்சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் மூன்று மாதம் கொடியேற்றம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்புமதுரை மாவட்டம்.சோழவந்தானில் பிரசித்தி […]
- உதகை மாரியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்கு அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலாஉதகை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்குஅலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா […]
- தென்காசி அருகே குளிர்பானக்கடையில் தீ விபத்துபுளியங்குடியில் குளிர்பான கடையில் தீ 1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி யது தொடரும் […]
- உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக […]
- வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை […]
- போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், […]
- குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழைகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி […]
- நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாசிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை […]
- பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழாபல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. […]
- இலக்கியம்விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் […]
- சிவகாசியில் ‘நம்வீட்டு மாடித்தோட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ‘நம் வீட்டு மாடித்தோட்டம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு […]
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு..,
பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்..!திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு […]