50ஆயிரத்திற்கும் குறைவாக கொண்டு சென்றாலே பிடிக்கிறார்கள்… இது என்ன நியாயம் ம்மா.., பறக்கும் படையினர் மீது திண்டுக்கல் கலெக்டரிடம் தமிழ்நாடு வணிகர் கூட்டமைப்பு பகீர் குற்றச்சாட்டை கிளப்பி புகார் மனுவை நீட்டி இருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் கொள்முதல் விற்பனை செய்ய வருகை தரும் வணிகர்களிடம் ரூபாய் 50 ஆயிரத்துக்கும் கீழே இருந்தாலும் பிடிப்பதாக புகார் மனுவாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வணிகருக்குள்ள பல்வேறு பிரச்சனைகளை குறித்தும் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தோம். அந்த மனுவில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்டு இருந்தது என குறிப்பிடத்தக்கது.