அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி உடனிருந்தார். முன்னதாக பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் வளையாபதி ஸ்ரீசுயம்பு தலைமையில் பரமார்த்தலிங்கபுரத்தில் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.