அதிமுக ஆட்சியில் மருத்துவக்கல்லூரி கட்டியதில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில் அப்போதைய முதல்வர் இபிஎஸ் இவ்வழக்கில் சிக்குவார் என தெரிகிறது.
எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக்கல்லூரி கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குத் தொடுத்துள்ளது. இபிஎஸ்க்கு எதிரான மருத்துவகல்லூரி முறை கேடு புகாரில் முகாந்திரம் உள்ளது. அவர் எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால் மேல்நடவடிக்கைக்கு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளது . இதனால் அவர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.