ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வாக்குகள் பிற கட்சிகளுக்கு கிடைக்காது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.
மதுரை, கோவில் பாப்பாக்குடி, பரவை உள்ளிட்ட மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குள் வரும் பகுதிகளை மாநகராட்சி வரையறைக்குள் இணைக்க கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுமான செல்லூர் கே.ராஜூ மனு அளித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
மதுரையில் 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. மாநகராட்சியுடன் பேரூராட்சி, ஊராட்சியை இணைக்க கூடாது என வலியுறுத்தினோம். அப்பகுதி மக்களுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்காது
பேரூராட்சி, ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைந்தால் வரி உயருமே தவிர வசதிகள் கிடைக்காது. பேரூராட்சி, ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மக்களின் விருப்பத்தின் பேரில் தான் ஊரக பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும். மதுரை பரவை பேரூராட்சி, கோவில் பாப்பாகுடி ஊராட்சியை இணைக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளேன்.
மாநகராட்சியில் ஏற்கனவே உள்ள பகுதிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொடுக்க முடியவில்லை, புதிதாக பகுதிகள் இணைக்கப்பட்டால் எப்படி அடிப்படை வசதிகளை செய்து தருவார்கள்.
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராடி வருகிறார்கள். அதனால் அந்த பகுதிகளை மாநகராட்சி யுகடன் இணைக்க வேண்டாம் என ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளேன். மக்கள் கருத்துக்களை கேட்டு இணையுங்க என உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் வைக்கிறேன் என்றார்.
அதிமுகவு ஓட்டு நாம் தமிழர் வேட்பாளருக்கு கிடைக்கும் என பேசியது குறித்த கேள்விக்கு.?
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வாக்குகள் பிற கட்சிகளுக்கு கிடைக்காது. ஆட்டு மந்தையில் அடைத்து போன்று மக்களை அடைத்து வைத்தார்கள். அதனால் அதிமுக நிற்கவில்லை.
நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக வாக்குகள் செல்லும் நிலை இல்லை. அதிமுக வாக்குகளை யாருக்கு செலுத்த வேண்டும் என மக்கள் முடிவெடுப்பார் என்றார்.
(ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக வாக்குகள் கிடைக்கும் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேச்சுக்கு பதில்)
மாநகராட்சியுடன் இணைத்தால் தான் மக்களுக்கு வளர்ச்சி கிடைக்கும் என்ற கேள்விக்கு.?
கூலுக்கே இங்கே திண்டாட்டம் இருக்கும் போது என்ன செய்ய முடியும்.? மாநகராட்சி பகுதிகளுக்கே ஒரு திட்டமும் செய்யவில்லை, அப்புறம் எப்படி புதிய பகுதிகளுக்கு எப்படி வளர்ச்சி கிடைக்கும் என்றார்.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை, இணைக்கப்பட உள்ள பகுதிகளுக்கு என்ன வளர்ச்சி திட்டம் செய்ய போகிறோம் என தமிழ்நாடு அரசு கூற வேண்டும் என்றார்.