தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை சர்வதேச அரங்கில் பெருமைப்படுத்தும் விதமாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சர்வதேச வேட்டி தின விழா கொண்டாடப்பட்டது.
அந்தந்த நாட்டில் நிலவும் தட்பவெப்பம், சூழல், பண்பாடு,தொழில் முறை, முதலியவற்றை குறிக்கும் விதமாகவே உடைகள் உருவாகின. அப்படி தமிழகத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ற உடையாக வேட்டி இருந்ததினால் தமிழர்கள் வேட்டியை உடுத்த துவங்கி உள்ளனர். முற்காலத்தில் வேட்டி காழகம் என்று அழைக்கப்பட்டுள்ளது.காழகம் என்பதற்கு அரையில் கட்டப்படும் ஆடை என்பது பொருள். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற சங்க கால தமிழ் நூல்களில் தமிழர்கள் வேட்டி உடுத்தி வாழ்ந்தனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மனிதன் அணிந்திருக்கும் உடையை வைத்து அந்த மனிதன் எந்த நாட்டைச் சார்ந்தவன் என்பதை குறிப்பிட முடியும். அந்த வகையில் வேட்டி கட்டி இருந்தால் அவன் தமிழன் என்ற அளவிற்கு வேட்டி சர்வதேச அரங்கில் தமிழர்களின் உடையாக உருவாகி உள்ளது. சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்த நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் வேட்டி சட்டையில் வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை சர்வதேச அரங்கில் பெருமைப்படுத்தும் விதமாக கல்வியாளர். முனைவர். குணசேகர் அரிய முத்து ஏற்பாட்டில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச வேட்டி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் சர்வதேச வேட்டி தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கல்வியாளர் முனைவர் குணசேகர் அரிய முத்துவுடன் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக துணைத் தலைவர் எம். சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சர்வதேச வேட்டி தினத்தை சிறப்பித்தனர்.மேலும் நிகழ்வில் பென்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் வீரமணி, ரவீந்திர சைலபதி, மாறன் பன்னாட்டு மாணவர் பேரவை அமைப்பின் நிர்வாகிகள் அஸ்வின், சங்கர், சிவக்குமார், ஆரோன், சுஜிதா, ரட்சிதா,திவ்ய பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]