• Thu. May 2nd, 2024

திருச்சுழியில் வாக்குப்பதிவு அதிகரிப்பு

ByBala

Apr 19, 2024

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்கட்டமாக மக்களைவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 57.86% சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 3 மணி நிலவரப்படி 58.34% வாக்குபதிவாகியுள்ளது.

இதனைதொடர்ந்து இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணியில் இருந்து வாக்குபதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சட்டமன்ற தொகுதி வாரியாக பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம். அறந்தாங்கி : 53.35 சதவீதம், பரமக்குடி (தனி ) : 53.29 சதவீதம், திருவாடனை : 51.37 சதவீதம், இராமநாதபுரம் : 48.35 சதவீதம், முதுகுளத்தூர் : 51.28 சதவீதம், திருச்சுழி : 59.94 சதவீதம் என சராசரி : 52.46 சதவீதம் பதிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *