இராஜபாளையம் செங்குட்டுவன் தெரு பகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி அதிகாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பங்கஜம் தலைமையில் போலீசார் ரோந்து ஈடுபட்டனர். அப்போது 26வது வார்டு கவுன்சிலர் மாரியப்பன் வீட்டை சோதனை செய்த பொழுது வாக்காளர் பெயர் அடங்கிய ஆவணங்கள் வாக்குச்சாவடி டோக்கன் வாக்காளர்கள் பணம் கொடுத்தற்கான ஆவணங்கள் சிக்கியதை அடுத்து அவரிடம் இருந்து ஏழாயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.