கழுகுமலையில் ஆச்சி ஹோட்டல் 2 வது கிளையை கடம்பூர் ராஜீ எம்எல்ஏ திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை தெற்கு ரத வீதியில் அதிமுக நகர செயலாளர் முத்துராஜ் க்கு சொந்தமான ஆச்சி ஹோட்டல் 2 வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி எம்எல்ஏ வுமான கடம்பூர் ராஜீ தலைமை வகித்து புதிய ஹோட்டலை திறந்து வைத்தார்.
நகர செயலாளர் முத்துராஜ் வரவேற்றார்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வக்குமார், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், கழுகுமலை நகர இளைஞரணி செயலாளரும், ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான கருப்பசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், கோவில்பட்டி ஆவின் மில்க் தலைவர் தாமோதரன், கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர் கவியரசன், வேலாயுதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ், மாவட்ட அம்மா பேரவை அவைத் தலைவர் மாரியப்பன், மாவட்ட வர்த்தக பிரிவு காமராஜ், நகர பொருளாளர் சுந்தரப்பசாமி, அண்ணா தொழிற்சங்கம் குமார், பசும்பொன் தேசிய கழகம் மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், கழுகுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் முத்தையா, கழுகுமலை புற்று கோயில் பூசாரி மாரியப்பன், கழுகுமலை தொழிலதிபர்கள் சுப்புலட்சுமி மரக்கடை மாரியப்பன், ஹாலோ பிளாக்ஸ் உரிமையாளர் அந்தோணி பாஸ்கர், காமினி பைனான்ஸ் ஜெயக்கொடி, சரண்யா பைனான்ஸ் ராஜாமணி பாண்டியன், சாஸ்தா பைனான்ஸ் கணேசன், வெங்கடேஸ்வரா பெயிண்ட் கடை உரிமையாளர் அய்யாத்துரைபாண்டியன், சர்வீஸ் ஸ்டேஷன் ராஜபாண்டி மற்றும் அதிமுக வார்டு செயலாளர்கள் மாரியப்பன், வேல்ச்சாமி, முருகன், செந்தில்குமார் மற்றும் செட்டிகுறிச்சி கிருஷ்ணசாமி, கொக்குகுளம் பசும்பொன்பாண்டியன், காலாங்கரைப்பட்டி முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் சுந்தர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அதிமுக நகர செயலாளர் முத்துராஜ் செய்திருந்தார்.