• Wed. May 27th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டி அருகே நம்ம ஊரு சூப்பரு திட்டம் தொடக்க விழா ..

தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தமிழக முழுவதும் கிராமங்கள் தோறும் குப்பையில்லா கிராமங்களை உருவாக்கி , சுகாதாரத்தை காப்பதற்காக நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை ஆரம்பித்து தொடங்கி வைத்தார் .

அதன் ஒரு கட்டமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தெருக்களை சுத்தம் செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம், யூனியன் ஆணையாளர்கள் மலர்விழி, பாலகிருஷ்ணன் ,ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி பாலமுருகன் ,துணைத்தலைவர் செல்வி மகாராஜன், ஊராட்சி செயலர் முத்துக்குமார் ,திமுக மாவட்ட பிரதிநிதி சிவா ,கவுன்சிலர் சதீஷ் உள்பட துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.