விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருப் பகுதியில், 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத மகா சிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசை நாட்களிலும் 7 ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள்.
கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களுக்கு முத்தம்மாள் (90) என்ற மூதாட்டியும் மற்றும் கோவில் பூசாரிகளும் கொதிக்கும் நெய்யை, பிரசாதமாக கருதி நெற்றியில் பூசி விடுவார்கள். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் நடைமுறையில்இருந்து வருகிறது. மேலும் கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுட்டு பூஜை செய்யும் வழக்கமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முந்தைய காலங்களில் கிழவியாத்தா மற்றும் வள்ளியம்மாள் என்ற மூதாட்டிகள் வெறும் கையினால், கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தன. தற்போது மூதாட்டி முத்தமமாள் வெறும் கையினால், கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு வழங்கி வருகிறார். இதற்காக மூதாட்டி முத்தம்மாள், கடந்த 40 நாட்களாக விரதம் இருந்து வருகிறார். இந்த திருநாளை முன்னிட்டு முன்னதாக அப்பம் தயாரிப்பதற்கான பொருட்களை ஊற வைத்து, விரதம் இருந்து வரும் பெண்களால், இனிப்பு உருண்டைகள் தயாரிக்கப்பட்டு, மூதாட்டியிடம் வழங்கப்படும். அவற்றை கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளினால் அப்பமாக சுட்டு, 7 கூடைகளில் நிரப்பபட்டு சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஒவ்வொரு மகா சிவராத்திரியன்றும் விரதமிருந்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பம் வழங்கப்படும். மூதாட்டி முத்தம்மாள் கொதிக்கும் நெய்யில், வெறுங்கையினால் சுடப்படும் அப்பத்தை சாப்பிட்டால், உடலில் நோய் நொடிகள் எதுவும் வராது, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு உடனடியாக மழலைப்பேறு கிடைக்கும், திருமண வயதில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கைகள் இன்றும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தாண்டும் இந்த நிகழ்ச்சியில் 7 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]
- இன்று ஒளிமின் விளைவுகளை கண்டறிந்த இராபர்ட் மில்லிகன் பிறந்த தினம்ஒளிமின் விளைவு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்ட, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலறிஞர், இராபர்ட் மில்லிகன் […]
- “சண்டை காட்சிகளில் நடிப்பவர்களுக்குக் காப்பீடு வேண்டும்” – நடிகை சனம் ஷெட்டி கோரிக்கை!புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் […]
- விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ : இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் […]
- மதுரை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைதிருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 45 நிமிடங்களுக்கு மேலாக இடி, மின்னலுடன் […]
- வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்குவட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஏழு […]
- விவேகானந்தர் மண்டபம் படகு போக்குவரத்து கட்டண உயர்வை – சிபிஎம் கட்சியினர் மனுகன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு […]
- அக நக முக நகையே..’ வந்தியத்தேவன்-குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானதுலைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்–2’ திரைப்படம் வரும் […]
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை..,அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்..!சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு […]
- தமிழக ஆளுநரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு..!ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் கூறிவந்த […]
- குறள் 407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று. பொருள் (மு.வ): நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான […]
- அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் […]
- உச்ச நடிகையாக மாற்றம் கண்டுவரும் ஐஸ்வர்யா மேனன்தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். […]
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]