தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்தி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுகவை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் கோவை ஆட்சியர் சமீரன் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி நாகராஜனிடம் மனு அளித்துள்ளனர்.மேலும் கோவையில் இதுவரை இல்லாத கலவரம் நடந்துள்ளது. கரூர், சென்னை குண்டர்களை வைத்து பண விநியோகம் நடந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை சரியாக நடக்காவிட்டால் தடுத்து நிறுத்துவோம் என்று அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.