அரசியல் கட்சிகள் மதத்தை கையில் எடுத்தால் அங்கீகாரம் ரத்து செய்யவேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு .
அரசியல் கட்சிகள் தங்களின் வெற்றிக்காக மத சின்னங்களையும், மதத்தையும் பயன்படுத்துவதை தடை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவினை ஏற்ற உச்சநீதிமன்றம் விரைவில் விசாரிக்கவுள்ளது. அப்படி தடை செய்தால் இந்திய அளவில் பல முக்கிய கட்சிகள் தடை செய்யப்படலாம்.