முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டு களை செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடப்பில் உள்ளது. இருந்தாலும் செல் போன் வைத்திருக் கும் பயணிகள் இந்த வசதியை பயன் படுத்த ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் கள். இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்ட நேரம் பயணச்சீட்டு பதிவு மையங் கள் முன் காத்திருக்க வேண்டியதில்லை. உரிய நேரத்தில் ரயில்களில் ஏறி பய ணம் செய்யலாம். பெரும்பாலும் முன்பதிவில்லாத பயணிகள் பயணச்சீட்டுகள் பெற கடைசி நேரத்தில் வரும் சூழல் உள்ளது. எனவே இருக்கின்ற தொழில்நுட்பத்தை பயன் படுத்தி கால நேர விரயத்தை தவிர்க்க லாம். செல்போனில் உள்ள ப்ளே ஸ்டோ ரில் யூடிஎஸ் ஆப் என்ற செயலியை எளி தாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்பு அதில் செல்போன் எண், பெயர், பாஸ்வேர்டு, பாலினம், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அதை சமர்ப்பிக்கும் போது நமது தக வல்களை சரிபார்க்க ஒரு ஓடிபி வரும். அதையும் செல்போனில் பதிவு செய்த பிறகு நாம் பயணச்சீட்டு பதிவு செய்ய தயாராகி விடுவோம். பயணச்சீட்டு தேவைப்படும் நேரத் தில் ரயில் நிலையத்திற்கு வெளியே மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் முன்பதிவு இல் லாத பயணச் சீட்டுகளை பதிவு செய்ய லாம். முதலில் செல்போன் எண் பாஸ் வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி செயலியை முடுக்கி விடலாம். புறப்படும் இடத்தை தேர்ந்தெடுக்கும் போது அதுவாகவே நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மூன்று ரயில் நிலை யங்களை தெரிவுசெய்யும். அதில் நமக்கு தேவையான நிலையத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
நாம் செல்ல வேண்டிய ரயில் நிலை யத்தை தேர்ந்தெடுக்க அந்த ரயில் நிலையத்தில் முதல் மூன்று ஆங்கில எழுத்துக்களை பதிவு செய்ய வேண்டும். அந்த மூன்று எழுத்தில் ஆரம்பிக்கும் பல்வேறு ரயில் நிலையங்கள் திரை யில் தோன்றும். அதில் நமக்குத் தேவை யானவற்றை தேர்வு செய்து கொள்ள லாம். நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருந்தால் அதுவும் திரையில் வரும். அதில் நாம் செல்ல வேண்டிய ரயில் செல்லும் வழி யை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு திரையில் கட்டணம் தோன்றும். கட்ட ணத்தை மொபைல் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆர் வாலட் ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம். பயணச்சீட்டு பதிவாகிவிடும். ரயில் பய ணச்சீட்டு பரிசோதகர் டிக்கெட் கேட் கும்போது இந்த செயலியில் உள்ள show ticket குறியீட்டை அழுத்தி செல் போன் பயணச்சீட்டை காண்பிக்க லாம். நாம் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட நிலையத்திற்கு சென்றால், அதை பதிவு செய்து கொண்டால் Quick booking முறையை பயன்படுத்தி பய ணச்சீட்டு விரைவாக பதிவு செய்ய லாம். இந்த செயலியின் மூலமாகவே ஆர்வாலட்டில் பணத்தை ரீசார்ஜ் முடி யும். பயணச் சீட்டுகள், நடைமேடை சீட்டுகள், சீசன் டிக்கெட் போன்றவற்றை இந்த செயலி மூலமாக எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். எனவே இந்த செயலியை பயன்படுத்தி விரைவான, எளிதான சேவையை பெறுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
- போலி பத்திரங்களை ரத்து செய்ய பதிவாளர்களுக்கு அதிகாரம்போலி பத்திரங்களை ரத்து செய்ய பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்ட மும்வடிவுக்கு ஒரு மாதத்தில் ஒன்றிய […]
- இயற்கையின் படைப்பில் மேகமலை … கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வீடியோ…தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ளது இயற்கை […]
- ஓபிஎஸ் வந்தால் இபிஎஸ் வெளியேறுவார்ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் […]
- உதய்பூர் கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பா?பரபரப்பு தகவல்
- என்.ஆர்.காங்-பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் திரெளபதி முர்மு ஆதரவு திரட்டினார்ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் […]
- எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும்எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் என மதுரையில் எல்ஐசி ஊழியர் சங்க மாநாட்டில் […]
- இந்து முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்தேனி மாவட்டம் அரண்மனை புதூரில் இந்து முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றதுதேனி மாவட்டம் […]
- திருக்குறள்குறள் 238: வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின் பொருள் (மு.வ): தமக்குப் பின் […]
- படித்ததில் பிடித்ததுஇருளை நேசி விடியல் தெரியும்..தோல்வியை நேசி..வெற்றி தெரியும்.. உழைப்பை நேசி..உயர்வு தெரியும்.. உன்னை நீ நேசி..உலகம் […]
- பொது அறிவு வினா-விடைஉலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித் ஒரு ஆண்டுக்கு 365 […]
- கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள்கடந்த 10ஆண்டுகளில் 80காவல்நிலைய மரண வழக்குகளில் 12 வழக்குகளில் மட்டுமே காவல்துறையினர் மீது தவறு உள்ளதால் […]
- சோமேட்டோவிலிருந்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த அனிரூத்..தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். இவர் இசையமைப்பில் இந்த ஆண்டு வெளியான […]
- கோயம்பேடு இல்லை… கிளாம்பாக்கம் வாங்க…சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெருக்கடியை குறைக்க வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் […]
- ஓபிஎஸ் தொண்டர்கள் அதிரடி- அதிர்ச்சியில் இபிஎஸ்சேலத்தில் ஓபிஎஸ் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்களால் அதிர்ச்சியில் இபிஎஸ் தரப்பு இருப்பதாக தகவல்அதிமுகவில் ஒற்றை தலைமை […]
- மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்கரூரில் நடைபெற்ற நிகழச்சியில் மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுகரூரில் நடைபெற்ற […]