நான் பனங்காட்டு படை கட்சியில் குறுக்கிடுவது கிடையாது. வீட்டுக்கு வந்தால் என்னுடைய கணவராக வருவார். இது ஒரு சாதி கட்சி. அதில் நான் தலையிடுவதும் கிடையாது. அவர் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்குப் பிறகு கட்சி தலைமையிடம் பேசினேன். ஆனால், அவர்கள் எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை.
எட்டு மாதங்களாக சிறையில் இருக்கும் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரை ஜாமினில் வெளியே கொண்டு வருவதற்கு அக்கட்சி முயற்சி எடுக்கவில்லை என்று ஹரி நாடரின் மனைவி என்று கூறிக்கொள்ளும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு.
தமிழ்நாட்டில் நடமாடும் நகைக்கடை என வர்ணிக்கப்படுபவர் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 44 தொகுதிகளில் தன்னுடைய கட்சி சார்பில் வேட்பாளர்களை, செலவுகளை அள்ளி செய்தார். தேர்தல் முடிந்த பிறகு பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு சிறைச்சாலையில் 8 மாதங்களாக இருந்து வருகிறார். அவரை ஜாமினில் வெளியே கொண்டு வருவதற்காக போராடி வருகிறேன் என்று கூறியிருக்கிறார் ஹரி நாடாரின் மனைவி என்றுக்கூறிக்கொள்ளும் மலேசியாவைச் சேர்ந்த தொழிலபதிபர் மஞ்சு என்ற பெண். இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “இப்போ நான் பேசுவதற்குக் காரணம் ஹரி நாடார்தான். எனக்கும் ஹரி நாடாருக்கும் சட்டப்படி திருமணம் ஆகவில்லை. ஆனால் எங்களுக்கு குழந்தை இருக்கிறது. சிறையிலிருந்து அவர் வெளியே வந்த பிறகு முதல் மனைவியை (ஷாலினி) விவகாரத்து செய்ய வேண்டும் என்றுதான் இருக்கிறார். விரைவில் எனக்கும் அவருக்கும் திருமணம் நடக்க உள்ளது. இங்கு நான் மனைவி என்று என்னை குறிப்பிட காரணம், எங்களுக்குக் குழந்தை இருக்கிறது. நீதிமன்றத்திலேயெ என்னை மனைவி என்று ஹரி நாடார் சொல்லியிருக்கிறார். நீதிமன்றத்தில்கூட அவருடைய மனைவி என்று என்னைத்தான் கையெழுத்திட அழைத்தார்கள். ஹரி நாடாரின் வாழ்க்கையில் நான் இருக்கிறேன். அது எல்லோருக்கும் தெரியும்..
நான் பனங்காட்டு படை கட்சியில் குறுக்கிடுவது கிடையாது. வீட்டுக்கு வந்தால் என்னுடைய கணவராக வருவார். இது ஒரு சாதி கட்சி. அதில் நான் தலையிடுவதும் கிடையாது. அவர் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்குப் பிறகு கட்சி தலைமையிடம் பேசினேன். ஆனால், அவர்கள் எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. கட்சியில் அவ்வளவு பேர் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் மலேசியாவிலிருந்து வந்து ஒரு பெண் என்றுகூட எனக்கு உதவவில்லை. பிறகு நானும் யாரிடமும் உதவி கேட்கவில்லை. நாங்கள் தலைமறைவாகவில்லை. தேர்தல் முடிந்த பிறகு கேரளாவில்தான் இருந்தோம். ஜாமினுக்காகக் காத்திருந்தோம். ஆனால், கிடைக்கவில்லை. அதன்பிறகு கேரள ரிசார்ட்டில் இருந்தபோதுதான் போலீஸ் வந்து கைது செய்தார்கள். என்னையும் கூடவே கைது செய்தார்கள். பெங்களூருவுக்கு அழைத்து சென்றபோதும், என்னைதான் மனைவி என்று போலீஸிடம் சொன்னார். பிசினஸுக்கு கடன் வாங்கியது தொடர்பாகத்தான் கைது செய்யப்பட்டார். மோசடி வழக்கு என்று சொன்னாலும் அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இது எனக்கு உண்மையிலேயே சோகமான நேரம். பெங்களூரு சிறையில் 8 மாதங்களாக இருக்கிறார். ஜாமினுக்காக போராடிகொண்டிருக்கிறோம். எமஷோனலா நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். கணவரைப் பற்றி மனைவிக்குத்தான் தெரியும். சிறைக்கு சென்றதிலிருந்து மிரட்டல்கள் வருகின்றன. எங்களுக்கு எந்த ஒத்துவைப்பும் உதவியும் இல்லை. எத்தனை வழக்குகள் போட்டாலும் அவரை வெளியே கொண்டு வந்து ஒரு நல்ல மனிதராக காட்டுவேன். ஹரி நாடார் வெளியே இருந்தவரை ஷாலினி எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. ஹரி நாடார் என்கூடத்தான் இருக்கிறார் என்று அவருக்குத் தெரியும். அப்போது புகார் கொடுத்திருக்கலாமே. ஹரி நாடார் மீது பிறகு ஏன் புகார் கொடுக்கணும். அரெஸ்ட் பண்ணனும் ஏன் சொல்லணும்? எஸ்.பி. வரைக்கும் ஏன் போகணும், சோஷியல் மீடியாவில் என் தவறாக எழுதணும்? ஹரி நாடார் வெளியே இருந்தபோது அவரிடமே தைரியமாகப் பேசியிருக்கலாமே. தன்னை ஓர் அனாதைன்னு சொல்லிதான் ஹரி நாடாரை திருமணம் செய்தார். ஆனால், பிறகு அவர் அனாதை இல்லைன்னு தெரிய வருகிறது. அது ஒரு பெரிய கேள்விக்குறி. நான் இப்போது இந்த இடத்தில் பேசுகிறேன் என்றால் என்னிடம் நேர்மை இருக்கிறது.” என்று மஞ்சு தெரிவித்துள்ளார்.
- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]