டாஸ்மாக் விற்பனை கடந்த சில மாதங்களாக சரிந்து வருவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூ10 முதல் ரூ80 வரை கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ4396 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதில் இருந்து தமிழகமுழவதும் 4 முதல் 6 சதவீதம் வரை விறபனை குறைந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விலை உயர்வு காரணமாக விற்பனை சரிந்து விட்டதா அல்லது குடிகாரர்கள் திருந்திவிட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.