சினிமா ஹீரோக்களை போல் இல்லாமல் ரயில் நிலைய ஊழியர் ரியல்ஹீரோவான வீடியோ காட்சி வைரல் ஆகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் ரயில் நிலைய ஊழியராக பணிபுரிபவர் சதீஷ்குமார் .
பிளாட்பார்மில் நடந்து சென்று கொண்டிருக்கும் சதீஸ்குமார்,தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் அமர்ந்திருப்பதை பார்த்து வேகமாக ஓடிச்சென்று சற்றி தள்ளி அமர வைக்கிறார். அவர் அதை செய்த ஒரு நொடிகளில் ரயில்வந்து விடுகிறது.தன் உயிரை துச்சமாக மதித்து சதீஷ்குமார் செய்த இந்த தீரமிகு செயலை ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளது.
உண்மை சினிமா ஹீரோக்களை விட சதீஷ்குமார்தான் ரியர் ஹீரோ என பலரும் பாராட்டி வருகின்றனர்.