மதுரை மாவட்டம் அனுப்பானடியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
மதுரை மாநகரில் கிழக்கு புறம் அமைந்துள்ளதும் சிவபெருமானின் திருவிளையாடல்களில் நரியை பரியாக்கிய லீலைக்காக ஆண்டுதோறும் நரிகள் அனுப்பப்படும் சிறப்பு கொண்ட இந்த அனுப்பானடியில் வீற்றிருந்து அருள் பாலித்து வரும் வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் புண்ணியாஜனம் மகா சங்கல்பம் ஆகியவுடன் துவங்கிய சிறப்பு பூஜையில் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட ஆஞ்சநேயரின் அருளை வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன
தொடர்ந்து லட்சுமி நாராயண ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு பூர்ணாஹதி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு பால் , மஞ்சள் . அரிசி பொடி , தயிர் , தேன் , இளநீர் , பன்னீர் , சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது . சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ஹோமகுண்டத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் குடங்கள் கொண்டும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பழங்கள் மற்றும் வண்ண மலர்களால் கொண்டு வீர ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.மேலும் பக்தர் ஒருவரால் உபயமாக வழங்கப்பட்ட வெள்ளி பூணூல் ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டது.
தொடர்ந்து மாலை நடைபெற்ற விழாவில் ஆஞ்சநேயர் பெருமானுக்கு தங்க கவசமும் , வடை மாலையும் சாத்தப்பட்ட சிறப்பு பூஜை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது . விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வீர ஆஞ்சநேயரை கண்குளிர தரிசனம் செய்தனர்.
- தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம்.., அஞ்சல் துறை செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம். பி கடிதம்!ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு […]
- இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!ஒன்பதாவது நாளான இன்று கிராமநிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தால் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் […]
- ராஜபாளையத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகம்!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 33 விவசாயிகளுக்கு தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதற்கு ஏற்ற நாட்டு […]
- சிவகாசியில், தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு அரிவாள் வெட்டு…
2 மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜ் (34). இவர் சிவகாசியில் உள்ள […] - தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு…விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் […]
- எம்.புதுப்பட்டி, ஸ்ரீகூடமுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள, பிரசித்திபெற்ற அருள்மிக […]
- சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி வயசு 55 இவருக்கு திருமணம் […]
- கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்- மனைவி தீக்குளிக்க முயற்சிசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளவிடு செய்ய இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கும் வட்டாட்சியர் […]
- ஐஸ்கிரீமில் தவளை விவகாரம்- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுதிருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை இருந்த விவகாரம்; கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக மாதிரிகள் […]
- திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன […]
- தலைக்கூத்தல் – சினிமா விமர்சனம்‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் […]
- கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்புகாவல்துறையினரின்நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் அவரது மனைவி […]
- மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்எல் ஐ சி ,எஸ் பி ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி […]
- மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்து மாற்றம்..!!மதுரை, விருதுநகரில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. […]
- சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள்- ஜனாதிபதி உத்தரவுசென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 17-ந் […]