மதுரை மாவட்டம் சோழவந்தானில் நீட் தேர்வு முறைகேடு புகாருக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என சோழவந்தான் ரயில் நிலைய விளம்பர சுவர்களில் மர்ம நபர்கள் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களும் அழிக்கப்பட்டு இருந்தது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சோழவந்தான் நகர் பகுதியில் அமைந்துள்ள தபால் அலுவலகத்தில் உள்ள இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் மற்றும் தபால் அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் போராட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பரவி வரும் நிலையில் தமிழகத்தில் சென்னையில் இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவ அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திலும் போராட்டம் அடுத்தடுத்து நடைபெறக்கூடிய சூழல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நேற்று ரயில் நிலையத்தில் விளம்பர பலகையில் உள்ள இந்தி எழுத்துக்கள் அளிக்கப்பட்டும் பிரதமர் நரேந்திர மோடி மத்திய மந்திரிக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்த நிலையில் தற்போது தபால் அலுவலகத்தில் உள்ள இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர்களை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




