ஒட்டன்சத்திரத்தில் அரசு பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் பேருந்து தீபிடித்தது.மாணவர் ஒருவர் பலி என தகவல்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருசக்கரவாகனம் மோதியதில் அரப்பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது இருசக்கர வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 பேரில் பிரவீன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து பேருந்து தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை வெளிப்பட்டது இதனால் அப்பபகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.