நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைருக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு ஆளுநர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீட்தேர்வு தமிழகத்தில் பல மாணவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.சிறுவயதிலிருந்தே மருத்துவ கனவோடு வாழும் ,மாணவர்கள் அவர்களின் பொற்றோர்களையும் அதி்ச்சியையும் ,வேதனையையும் உருவாக்கியது.நீட் தேர்விலிருந்து தப்பி வெளிநாடுகளில் மருத்தவம் படிக்கும் மாணவர்கள் ஏராளம்.அதிலும் உக்ரைன் போருக்கு பின்னால் அங்கு மருத்தவம் படித்த மாணவர்களின் நிலை என்ன என்பதேகேள்விக்குறியதாக உள்ளது.
தற்போது தமிழகத்தின் ஆளும் கட்சியான தி.மு.க நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்று தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குகளை ஈர்த்தது. நீதிபதி ராஜன் குழுவை நியமித்து , அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மாநில சட்டப்பேரவையில் சட்டமியற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் திமுக அரசு அனுப்பி வைத்தது.
ஆனால், அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி 142 நாட்களுக்குப் பிறகு சில ஆட்சேபங்களைக் குறிப்பிட்டு சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார். இதைத்தொடர்ந்து மாநில சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. மீண்டும் நீட் விலக்கு மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. கடந்த மார்ச் 13ஆம் தேதிமசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறும் மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மசோதாக்கள் சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டால் அதை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அப்போது தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு மற்றும் பாரதியார் உருவச்சிலை திறப்பு விழாவையொட்டி ஆளுநர் ராஜ்பவன் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தாமதப்படுத்தும் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தவிர்ப்பதாக தமிழக அரசு சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மசோதா தொடர்பான தமது பரிசீலனை மற்றும் பணிகள் முடிந்து விட்டதால் அதை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக மாநில ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் முடிவு செய்துள்ள தகவல், சமீபகாலமாக மாநில அரசு மற்றும் ஆளுநருக்கு இடையிலான மறைமுக போர் முடிவுக்குவரும் என எதிர்பார்க்கலாம்.

- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]