நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் விரைவில் அந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து உள்ளது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ளது.
எப்போதும் போல சென்னையில் இந்த முறையும் மக்கள் அதிகமாக வாக்களிக்கவில்லை. சென்னையில் நேற்று காலையில் இருந்து பிற்பகல் வரை வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் குறைவாகவும், மந்தமாகவும் காணப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிகளில் அதிகபட்சமாக கரூரில் 75.84% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல் சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சமாக 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி சென்னை 45-வது புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்து நேற்று சென்னையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இன்னும் 2 நாட்களில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவேன் என்று கூறினார். ஒரு முக்கியமான நல்ல செய்தியை கூறுவேன். இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இப்போது நான் நலத்திட்டங்கள், அறிவிப்புகள் எதையும் வெளியிட கூடாது. அது தேர்தல் விதி மீறலாக இருக்கும், என்று முதல்வர் புதிராக பேசி இருந்தார்.
இந்த நிலையில்தான் நேற்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினின் அந்த நல்ல செய்தி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி ஏற்கனவே நம்மிடம் பேசிய தலைமை செயலக வட்டாரங்கள், தேர்தல் முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் அந்த சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிடுவார். குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் அறிவிப்புதான் அது என்று பலர் நினைக்கிறார்கள்.
ஆனால் முதல்வர் வெளியிட போகும் அறிவிப்பு அது இல்லை. கோவை மற்றும் சேலம் மாநகராட்சிகளை கைப்பற்ற திமுக படாத பாடு பட்டு வருகிறது. இதற்காக தான் வெளியூரில் இருந்து ஆட்களை நியமித்து கோவை சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநகராட்சி போல பராமரிக்கப்பட்டது. கோவையை ஜெயிக்க வைக்கும் பொறுப்பும் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது புரிந்திருக்கும் என்ன நல்ல செய்தி என்று கோவை வென்றால் அமைச்சர் பதவி உதயநிதிக்கு தானாக தேடி வரும்.
ஆனால் எந்த அமைச்சரிடம் பரஸ்பரம் பேச போகிறார்கள் என்று தெரியவில்லை.ஆனால் கோவை வென்றால் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை கிப்ட் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் தயாராக உள்ளதாக தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]