தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்
நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் படி, குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் நிகழ்ச்சி,அப்துல் கலாம் மகளிர் நல்வாழ்வு சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் பவிஷ் கலந்துகொண்டு அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜியோன் ரத்த பரிசோதனை நிலையம் சார்பில் அனைவருக்கும் ரத்த பரிசோதனை,ரத்த சர்க்கரை அளவு, ரத்த சோகப் போன்ற பரிசோதனைகளை இலவசமாக செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.