முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா உடல்நலக்குறைவால் காலமானார். 1977,80,84,1991 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டவர். 1991 ம் ஆண்டு ஜெ. முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தபோது சபாநாயகராக பதவி வகித்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய சேடபட்டி முத்தையா அதிமுக பொருளாளராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர் காலத்தில் எம்.பி.யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.