வாரணாசியிலிருந்து திரும்பும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ராமேசுவரம் செல்கிறார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் ராமேசுவரம் சென்று சாமி தரிசனம் செய்து அங்குள்ள கடலில் நீராடினார். பின்னர் புனித நீருடன் வாரணாசி சென்று காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி கும்பிட்டார். இன்று இரவு விமானம் மூலம் சென்னை வரும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் நாளை ராமேசுவரம் சென்று புனித நீராடுகிறார். அதன் பிறகு பெரியகுளம் செல்கிறார்.