• Thu. Mar 28th, 2024

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு
ஆம்புலன்ஸில் அழகான ஆண்குழந்தை

ஈரோடு மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது அழகான ஆண்குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மா.ரங்கசாமி இவருடைய மனைவி மைலா 21 வயது நிறைமாத கர்ப்பிணியான அவர், இன்று அதிகாலை 5 மணியளவில் பிரசவ வலியால் துடித்தார். அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்து அவரை, குத்தியாளத்தூர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
108 ஆம்புலன்ஸ் கிட்டாபாளையம் திஷீக்ஷீமீst அருகே வந்தபோது மைலாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட குத்தியாளத்தூர் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்தி மருத்துவ நுட்புநர் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது மைலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் வே.குமரேசன் மற்றும் வாகன ஓட்டுனர் சே.வரதராஜன் ஆகியோரின் இந்த செயலை மண்டல மேலாளர் குமரன், மாவட்ட மேலாளர்கள் வசந்த், கணேஷ் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *