நலிந்துவரும் நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கவும், நாட்டுப்புற கலைகளை மக்களிடம் பரப்பி அடுத்த தலைமுறையிடம் கொண்டுசெல்லும் வகையில் தமிழக அரசு, அரசு நிகழ்ச்சிகளில் இதை ஒரு பகுதியாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் நாட்டுப்புற கலைகளை ஒரு பகுதியாக்க நடவடிக்கை எடுக்க தொழில் மற்றும் வணிக வரித்துறை ஆணையரகம், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.