எலக்ட்ரோபதி மருத்துவத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் _06)ம் நாள் கன்னியாகுமரி ‘YMCA’ வளாகத்தில் தொடங்கியது, இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தமிழகம் அளவிலான முதல் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து எலக்ட்ரோபதி மருத்துவர்கள் மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் முக்கிய விருந்தினராக பங்கேற்ற, கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு, எலக்ட்ரோபதி மருத்துவர்களை வாழ்தியதோடு, மாநாடு வெற்றியடையவும் வாழ்த்து தெரிவித்தவர்.கூட்டமைப்பின் சார்பாக ஒன்றிய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்ற த்தில் குரல் எழுப்புவதாக உறுதியளித்தார்.