சிந்தனைத்துளிகள்
அழகு என்பது முகத்தில் மட்டும் அல்ல..
பல நேரங்களில் மனதில்..
சில நேரங்களில் வார்த்தைகளில்.!
முயற்சி செய்து தோற்றவனுக்கு
தோல்வி என்பது ஒரு பாடம் தான்..
முயற்சி செய்யாதவனுக்கு வெற்றி
என்பது என்றுமே கனவு தான்.!
வாழ்க்கையில் எந்த சூழலிலும் நின்று
போராடும் தைரியமே தன்னம்பிக்கை.!
போராடித் தோற்பதும் வாழ்வின்
ஒரு இன்பம் என்பதை மறந்து விடாதீர்கள்..
எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்க கூடாது.
அறிவாளியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை..
யாரையும் அறியாமல் காயப்படுத்தி விட கூடாது என்பதே
நம் நோக்கமாக இருக்க வேண்டும்.!