சிந்தனைத்துளிகள்
ஆசிரியர் சிந்தனை கதை
மாணவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே சிகெரெட் பிடிக்க தொடங்கி விட்டான். 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் மது அருந்தவும் கற்று கொண்டான். இருப்பினும் தட்டு தடுமாறி பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் போய் சேர்ந்தான்.
சொல்லவா வேண்டும் பள்ளியில் மது அருந்த கற்று கொண்டவன் ஒரு படி மேல் சென்று மற்ற போதை பொருட்கள் அனைத்திற்கும் அடிமையானான். போதா குறைக்கு பெண்கள் சகவாசமும் அதிகமானது.
இப்படியே சென்று கொண்டிருந்ததால் அதிக பணம் தேவைப்பட்டது. அதனால் சக மாணவர்களிடம் கடன் வாங்குவதில் ஆரம்பித்தது இறுதியில் வழிப்பறி, வீதியில் செல்பர்களின் கழுத்தில் இருக்கும் நகைகளை பறிப்பது போன்றவற்றை செய்ய தூண்டியது.
போதை மயக்கத்தில் அவனும் எதற்கும் தயங்காமல் எல்லாவற்றையும் செய்தான். ஒரு கட்டத்தில் கொலை செய்வதற்கும் துணிந்து, அதையும் செய்தான். எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு வந்தது. போலீஸ் அவனை கைது செய்தது. அவன் செய்த அனைத்து குற்றங்களுக்கும் சேர்த்து நீதிபதி அவனுக்கு மரண தண்டனை வழங்கினார். சிறையில் அடைக்கப்பட்ட அவன், தன் மரண தண்டனை தேதியை எண்ணி எண்ணி நாட்களை கழித்தான். மரணம் ஒருவனுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்துவிடும். அவனுக்கும் புரிய வைத்தது. கடைசியில் மரண தண்டனை நாளும் வந்தது.
அவனிடம் வந்த அதிகாரிகள் உனக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்ற போகிறோம், ஏதாவது கடைசி ஆசை இருக்கிறதா என்று கேட்டனர். அவன் அதற்கு கடைசியாக ஒருமுறை என் அப்பா அம்மாவை பார்த்து பேச வேண்டும் என்றான்.
அதிகாரிகள் அதற்கு ஏற்பாடு செய்தார்கள். நேரில் வந்த அவனது தாய் தந்தை கதறி அழுது, என் மகனை எல்லாரும் சதி செய்து பொய் வழக்கு போட்டு இந்த நிலைமைக்கு ஆக்கிவிட்டார்கள் என்று அழுது புலம்பினார்கள்.
அப்போது பேசத்தொடங்கிய மகன், என்னுடைய இந்த நிலைமைக்கு இவர்கள் யாரும் காரணம் இல்லை. நீங்களும் நம் குடும்பமும் தான் காரணம் என்றான்.
அதிர்ச்சி அடைந்த அந்த தாய் தந்தை, நாங்கள் என்ன செய்தோம், உன்னை ஜாமினில் விடுவிக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் எதுவும் முடியவில்லை என்றார்கள்.
அதற்கு அந்த இளைஞன் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறை ஆசிரியர் என்னை அடித்து விட்டார் என்று உங்களிடம் அழுது கொண்டே வந்து சொன்னேன்.
நீங்கள் ஏன் எதற்கு என்று கூட கேட்காமல் நம் உறவினர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்று, அந்த ஆசிரியரையும் அவரை காப்பாற்ற வந்த மற்ற ஆசிரியர்களையும் அடித்து நொறுக்கினீர்கள். அதன் பிறகு எந்த ஆசிரியரும் என்னை ஏன் எதற்கு என்று எதையும் என்னிடம் கேட்பதில்லை. அதன் விளைவு இந்த சிறுவதில் நான் சாகப்போகிறேன் என்றான்.
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]