• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

May 8, 2023

சிந்தனைத்துளிகள்

1.எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு.

  1. மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ, எதை நம்புகிறதோ, அதில்
    அவன் வெற்றி பெறுகின்றான்.
  2. நிதானமாகவும், மிதமாகவும் இரு. உன் உடல் நலமாக இருக்கும்.
  3. பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது.
  4. சேமித்த ஒரு பைசா என்பது சம்பாதித்த ஒரு பைசாவாகிறது.
  5. தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை.
  6. நட்பு ஆண்டவன் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள வரங்களில்
    தலைசிறந்தது.
  7. காதல், இருமல், புகை இவற்றை மூடி மறைப்பது கஷ்டம்.
  8. பாடுபடாமல் பயன்கள் கிட்டாது.
  9. பொறுமையாக இருப்பவனால்தான் விரும்பியதைப் பெறமுடியும்.