சட்டவிரோத பணபரிவர்த்தனை மூலம் பணம் பெற்று தமிழகத்தில் உருவாகும் பல உற்பத்தி நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு குரல் கொடுத்துவரும் போலியான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொது நல வழக்குகள் தொடரும் வழக்கறிஞர்கள் குழு சார்பாக வழக்கறிஞர் முத்துக்குமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்!
மதுரை செய்தியாளர்கள் சங்க அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுநல வழக்குகளை தொடரும் வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் பேசுகையில், ‘தொழில்துறையில் இந்தியாவில் குறிப்பாக தென் தமிழகம் தன்னிறைவு பெறாமல் இருக்கிறது. அதற்கு தென் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய தொழிற்சாலைகள் இந்த பகுதியில் இல்லாததே காரணம்
குறிப்பாக கூடங்குளம் அனல் மின் நிலையம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகள் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து வந்த நிலையிலும் பொருளாதாரத்தில் அந்த பகுதியை மேம்படுத்திய நிலையிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் போராட்டங்களை முன்னெடுத்து அதுபோன்ற தொழிற்சாலைகளை மூடுவதற்கு உற்பத்தியை நிறுத்துவதற்கும் காரணமாக இருந்தார்கள். இதுபோல தற்சமயம் சோலார் மின்சக்தி என்பது மக்களுக்கு கண்டிப்பான ஒன்றாகிவிட்ட நிலையில் தென் தமிழகத்தில் சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்கும் நிறுவனங்கள் தரிசு நிலங்களை விலைக்கோ அல்லது ஒப்பந்தத்தின் பெயரிலோ வாங்கி அதை சோலார் மின்சக்தி தயாரிக்கும் நிறுவனத்திற்கு பயன்படுத்துவதற்கான திட்டங்களை செய்து வருகிறார்கள்
இதில் அந்த பகுதி மக்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் அந்த பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் போராட்டங்களை நடத்தி இதுபோன்ற தொழிற்சாலைகளையும் தென் தமிழகப் பகுதிக்கு வர விடாமல் தடுப்பதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்
தென் தமிழகப் பகுதியில் BE படித்தவர்கள் கூட துப்புரவுத் தொழில் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது இளைய சமுதாயம் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். மக்களுக்கு தவறான செய்திகளை பரப்பி தவறான முன்னுதாரணங்களை காரணம் காட்டி போராட்டம் நடத்தி பொருளாதார முன்னேற்றத்தையும் இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் கெடுக்கும் வெளிநாட்டு அந்நிய சக்தியின் பண உதவியை பெற்றுக்கொண்டு போராட்டங்கள் நடத்தும் அமைப்புகளை கண்டறியவேண்டும் கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
அயல்நாட்டு உதவிகளை அயல்நாட்டு பண பரிவர்த்தனைகளை பெற்று போராட்டம் நடத்தும் அமைப்புகளை மாநில உளவுத்துறை கண்காணித்து வருகிறது இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது இதுகுறித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம். எங்களது மனு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரவும் தயாராக இருக்கிறோம்.
சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் போராட்ட பின்னணி கொண்டவர்களின் பண பரிமாற்றம் குறித்தும் அவர்களது அயல்நாட்டு தொடர்புகள் குறித்தும் உளவுத்துறை சரியான தகவல்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என மதுரையில் வழக்கறிஞர்கள் சார்பாக செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் முத்துக்குமார் தெரிவித்தார்.
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]