சட்டவிரோத பணபரிவர்த்தனை மூலம் பணம் பெற்று தமிழகத்தில் உருவாகும் பல உற்பத்தி நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு குரல் கொடுத்துவரும் போலியான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொது நல வழக்குகள் தொடரும் வழக்கறிஞர்கள் குழு சார்பாக வழக்கறிஞர் முத்துக்குமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்!
மதுரை செய்தியாளர்கள் சங்க அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுநல வழக்குகளை தொடரும் வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் பேசுகையில், ‘தொழில்துறையில் இந்தியாவில் குறிப்பாக தென் தமிழகம் தன்னிறைவு பெறாமல் இருக்கிறது. அதற்கு தென் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய தொழிற்சாலைகள் இந்த பகுதியில் இல்லாததே காரணம்
குறிப்பாக கூடங்குளம் அனல் மின் நிலையம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகள் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து வந்த நிலையிலும் பொருளாதாரத்தில் அந்த பகுதியை மேம்படுத்திய நிலையிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் போராட்டங்களை முன்னெடுத்து அதுபோன்ற தொழிற்சாலைகளை மூடுவதற்கு உற்பத்தியை நிறுத்துவதற்கும் காரணமாக இருந்தார்கள். இதுபோல தற்சமயம் சோலார் மின்சக்தி என்பது மக்களுக்கு கண்டிப்பான ஒன்றாகிவிட்ட நிலையில் தென் தமிழகத்தில் சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்கும் நிறுவனங்கள் தரிசு நிலங்களை விலைக்கோ அல்லது ஒப்பந்தத்தின் பெயரிலோ வாங்கி அதை சோலார் மின்சக்தி தயாரிக்கும் நிறுவனத்திற்கு பயன்படுத்துவதற்கான திட்டங்களை செய்து வருகிறார்கள்
இதில் அந்த பகுதி மக்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் அந்த பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் போராட்டங்களை நடத்தி இதுபோன்ற தொழிற்சாலைகளையும் தென் தமிழகப் பகுதிக்கு வர விடாமல் தடுப்பதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்
தென் தமிழகப் பகுதியில் BE படித்தவர்கள் கூட துப்புரவுத் தொழில் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது இளைய சமுதாயம் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். மக்களுக்கு தவறான செய்திகளை பரப்பி தவறான முன்னுதாரணங்களை காரணம் காட்டி போராட்டம் நடத்தி பொருளாதார முன்னேற்றத்தையும் இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் கெடுக்கும் வெளிநாட்டு அந்நிய சக்தியின் பண உதவியை பெற்றுக்கொண்டு போராட்டங்கள் நடத்தும் அமைப்புகளை கண்டறியவேண்டும் கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
அயல்நாட்டு உதவிகளை அயல்நாட்டு பண பரிவர்த்தனைகளை பெற்று போராட்டம் நடத்தும் அமைப்புகளை மாநில உளவுத்துறை கண்காணித்து வருகிறது இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது இதுகுறித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம். எங்களது மனு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரவும் தயாராக இருக்கிறோம்.
சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் போராட்ட பின்னணி கொண்டவர்களின் பண பரிமாற்றம் குறித்தும் அவர்களது அயல்நாட்டு தொடர்புகள் குறித்தும் உளவுத்துறை சரியான தகவல்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என மதுரையில் வழக்கறிஞர்கள் சார்பாக செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் முத்துக்குமார் தெரிவித்தார்.
- திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ52 லட்சம் உட்பட தங்கம், வெள்ளி பொருட்கள் கிடைத்தனதிருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.52 லட்சம் தங்கம் 253 கிராம். வெள்ளி 2 கிலோ […]
- அடியாட்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக நில அளவையருடன் வாக்குவாதம்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக […]
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]