எடப்பாடி பழனிசாமி விரைவில் அரசியலில் இருந்து காணாமல் போவார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.
ஓபிஎஸ்-ஐ அவமானப்படுத்தும் வகையில் இபிஎஸ் பேசி வருகிறார். இபிஎஸ்க்கு தேவை பணம், பதவி மட்டுமே. எங்களுடன் 25 எம்.எல்.ஏக்கள் பேசி வருகின்றனர். கோவையில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் பிரம்மாண்ட கூட்டத்தின் போது எங்களுடன் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரியவரும் .. என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார். இதனால் இபிஎஸ் தரப்பு கலக்கத்தில் இருக்கிறது. மேலும் அவர்களை கண்டுபிடிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளதாம்.