உலகம் முழுவதும் உள்ள மக்கள் எல்லோரும் 2022-ம் ஆண்டை கோலாகலமாக வரவேற்க தயாராக உள்ள நிலையில் ஜீ தமிழ் டிவி தனது நேயர்களுக்கு பிரமிப்பூட்டும் தொடர் நிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஜன., 1ம் தேதி வழங்க உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள், ஜீ தமிழ் தொலைக்காட்சி பாரம்பரியமான விவாத நிகழ்ச்சியான – ‘பட்டிமன்றம்’ மூலம் இனிதே துவங்குகிறது. காலை 9 மணிக்கு கலைமாமணி விருது பெற்ற சுகி சிவம் தலைமையில்’வெள்ளையர்களின் வருகைக்குப் பின் நாம் அதிகம் பெற்றோமா? அல்லது அதிகம் இழந்தோமா?’ என்கிற தலைப்பில் சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம் நடக்கிறது. பர்வீன் சுல்தானா, சாந்தாமணி, டாக்டர். சுந்தர ஆவுடையப்பன், கே சரவணன், சுசித்ரா, மற்றும் மோகன சுந்தரம் ஆகிய பிரபலங்கள் பங்கேற்று, நேயர்களின் மனம் கவரும் வகையில் விவாதிக்கவுள்ளனர்.
காலை 10 மணிக்கு ஆக்ஷன் திரைப்படமான ‘கொரில்லா’ படம் ஒளிபரப்பாகிறது. ஒரு சிறு குற்றவாளி, நடிகராகத் துடிக்கும் ஒரு நபர், சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் மற்றும் வங்கியால் கடன் மறுக்கப்பட்ட ஒரு விவசாயியின் கூட்டாளி – ஆகிய நான்கு நண்பர்களின் வாழ்க்கைப் பயணத்தை இத்திரைப்படம் பேசுகிறது. டான் சாண்டி இயக்கி உள்ள இந்த படத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ் ஆகியோருடன் சிம்பான்சி குரங்கு ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.
இதையடுத்து இசைப்போட்டி நிகழ்ச்சியான ‘சவுண்ட் பார்ட்டி’ ஒளிபரப்பாகவுள்ளது. இதில், நடிகர் வைபவ், நடிகை பார்வதி நாயர், இயக்குனர், நடிகர் பாண்டியராஜன், சம்யுக்தா சண்முகநாதன், ரித்திகா மற்றும் சோம் சேகர் ஆகியோர் பங்கேற்று, கேளிக்கை நிறைந்த சுவாரஸ்யமான சவால்களை சந்திக்கவுள்ளார்கள். நேயர்கள் இந்த ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியினை மதியம் 12:30 மணிக்குக் காணலாம்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் அடுத்த ஒன்றரை மணிநேரமும் சிந்திக்கத் தூண்டும் போட்டிகளைக் கொண்ட விளையாட்டு நிகழ்ச்சியான ‘ரன் பேபி ரன்’ ஒளிபரப்பாகும். பிற்பகல் 2 மணி முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்த விளையாட்டு நிகழ்ச்சியினை, நடிகர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஜகன் நகைச்சுவையான பல சவால்களுடன் தொகுத்து வழங்க; பிரபல கலைஞர்கள் மிதுன், புவியரசு முத்துசாமி, நந்தா மாஸ்டர், சர்வைவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன், தர்ஷனா & அஷ்வினி ராதாகிருஷ்ணா உள்ளிட்டோர் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக, நேயர்களுக்கு விருந்தாக, பிற்பகல் 3:30 மணிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ‘டக் ஜெகதீஷ்’ திரைப்படம், ஜீ தமிழில் திரையிடப்படவுள்ளது. சிவா நிர்வானா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நானி கதாநாயகனாகவும், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். குடும்ப பாசமும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்து இந்த படம் உருவாகி உள்ளது.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]