சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று காலை முதல் காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
நிலக்கரி ஒதுக்கீட்டில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் வெளியானதையடுத்து, இந்த சோதனை நடப்பதாக அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கவரில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக பூபேந்திர பாகெல் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3 நாட்கள் செயற்குழுக் கூட்டம் வரும் 24 முதல் 26ம் தேதிவரை ராய்பூரில் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் அங்கு அமலாக்கப்பிரிவு ரெய்டு நடந்துள்ளது.
அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “காங்கிரஸ் நிர்வாகிகள் நிலக்கரி ஒதுக்கீட்டில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளோம். எம்எல்ஏ தேவேந்திர யாதவுக்கு சொந்தமான 12 இடங்களில ரெய்டுநடக்கிறது.
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளார் ராம்கோபால் அகர்வால், மாநில கட்டுமான மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தலைவர் சுஷில் சன்னி அகர்வால், செய்தித்தொடர்பாளர் ஆர்பி சிங் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடக்கிறது. இது தவிர ஆளும் கட்சி நிர்வாகிகள் சிலரின் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது. நிலக்கரி ஒதுக்கீட்டில் யாரெல்லாம் பயன் அடைந்தார்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு சோதனை நடக்கிறது” எனத் தெரிவித்தன
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுஷில் ஆனந்த் சுக்லா கூறுகையில்” காங்கிரஸ் கட்சியின் 85வது செயற்குழுக் கூட்டத்தைப் பார்த்து பாஜக அஞ்சுகிறது, அதற்கு இடையூறு செய்யவே அமலாக்கப்பிரிவு மூலம் ரெய்டு நடத்துகிறது. பாஜக தோல்வி அடையும்போதெல்லாம், எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கப்பிரிவு, சிபிஐ அமைப்புகளை ஏவி விடுகிறது. இந்த ரெய்டுக்கு எதிராக காலை 11 மணிக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகம்முன் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்துவார்கள்” எனத் தெரிவித்தார்.
அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ நிலக்கரி வெட்டிஎடுத்தலுக்கு டன்னுக்கு ரூ.25 சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்தலைவர்கள், இடைத்தரகர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை ஐஏஎஸ் அதிகாரி சவுரேஸ்யா, சூர்யகாந்த் திவாரி, அவரின் மாமா லட்சுமிகாந்த் திவாரி, ஐஏஎஸ்அதிகாரி சமீர் வைஷ்னோய், நிலக்கரி வியாபாரி சுனில் அகர்வால் ஆகியோர் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]