• Fri. Mar 29th, 2024

நாளை காங்கிரஸ் தலைவர் தேர்தல் – சத்தியமூர்த்தி பவனில் வாக்களிக்கிறார்கள்

ByA.Tamilselvan

Oct 16, 2022

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டதால் நாளை (திங்கள்) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் இருவரும் களத்தில் மோதுகிறார்கள்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில தலைவர்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள். இந்தியா முழுவதும் 9,300 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 711 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவுக்காக சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *