• Tue. Apr 16th, 2024

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவிற்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல்..,

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை மறைவிற்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல் தெரிவித்தார். அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை தவசிலிங்கம் உடல்நல குறைவால் கடந்த 17ம் தேதி காலமானார். தவசிலிங்கம் மறைவிற்கு முன்னதாக இரங்கல் தெரிவித்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள கே.டி.ராஜேந்திரபாலாஜியின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தையின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, டாக்டர் விஜயபாஸ்கர், நத்தம் விசுவநாதன், காமராஜ், ராஜலட்சுமி, இன்பத்தமிழன், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மான்ராஜ் கலந்து கொண்டனர்.

மேலும் இவர்களுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரபிரபா, எதிர்கோட்டை சுப்பிரமணியன், சிவசாமி, சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ, கடையநல்லூர் எம்எல்ஏ குட்டியப்பா, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தகவல் தொழில்நுட்ப மதுரை மண்டல தலைவர் ராஜ்சத்தியன், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் சுபாஷினி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டியன், மாநகர பகுதி கழக செயலாளர் கருப்பசாமிபாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, சாம்(எ)ராஜா அபினேஷ்வரன், சரவணக்குமார் ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, விருதுநகர் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், மச்சராஜா, தர்மலிங்கம், விருதுநகர் நகர செயலாளர் நெய்னார்முகமது, தகவல் தொழில்நுட்ப நகர கழகச் செயலாளர் பாசறை சரவணன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மயில்சாமி, ராஜபாளையம் வடக்கு நகர கழகச் செயலாளர் துரைமுருகேசன், தெற்கு நகர கழக செயலாளர் பரமசிவம், செட்டியார்பட்டி பேரூராட்சி செயலாளர் அங்குதுரைபாண்டியன், சேத்தூர் பேரூர் கழக செயலாளர் பொன்ராஜ்பாண்டியன், ராஜபாளையம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் குருசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், வத்ராப் ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, சாத்தூர் நகர செயலாளர் இளங்கோவன், நரிக்குடி ஒன்றிய கழக செயலாளர் பூமிநாதன், அதிமுக மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு, சிவகாசி மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பால்பாண்டி,மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், நகர செயலாளர் மாயாண்டி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி அஜய்கிருஷ்ணா,சிவகாசி ஒன்றிய கழக பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், சிவகாசி கிழக்கு ஒன்றிய இணை செயலாளர் இளநீர்செல்வம் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *