சிவகாசி மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு கூட்டம் சிவகாசியில் நடைபெற்றபோது பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திமுக என்றாலே ஒரு தீய சக்தி என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களே கூறியுள்ளார்.
அந்த தீய சக்தியை ஒழிப்பதற்கு தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பிறந்தார்கள். அண்ணாதிமுகவை அழிக்க வேண்டும் உடைக்க வேண்டும் என்று எங்கள் நிர்வாகிகள் மீது பொறுப்பாளர்கள் மீது திமுக அரசு பொய்யான வழக்குகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து புரட்சித்தலைவி அம்மா காலத்தில் இருந்து தற்போது வரை அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர் மீது பொய் வழக்கு போடுவதை திமுக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த பொய்யான வழக்குகளை சந்திக்கும் திராணி அண்ணா திமுக தொண்டர்களுக்கு உண்டு. திமுக அரசு போடும் பொய் வழக்குகளை கண்டு அண்ணா திமுக நிர்வாகிகள் பயப்பட மாட்டார்கள்.
புரட்சித்தலைவி அம்மா இருக்கும் போதே அவரை கொலை செய்ய முயற்சி செய்தார்கள் .சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களை இழிவு படுத்தினார்கள் தாக்கினார்கள். அந்த நேரத்தில்கூட துணிவோடு இருந்து இந்த கட்சியை காப்பாற்றியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அந்த இரு பெரும் தலைவர்களின் வழியில் அண்ணா திமுக தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. இங்கு அமர்ந்திருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். யாரோ ஒருவர் யாருக்கோ வேலை வாங்கி தருவதாக ரூபாய் வாங்கினாராம். அவர் இவரிடம் கொடுத்ததாக கூறியதாக சொல்லி பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்படி பொய்யான வழக்குகளை பதிவு செய்து அச்சுறுத்தி தேர்தல் பணிகளை செய்ய விடாமல் திமுக அரசு தடுக்கின்றது .
திமுக அரசு எவ்வளவு பொய்யான வழக்குகளை போட்டாலும் மிரட்டினாலும் அத்தனையும் தவிடு பொடியாக்கி இந்த தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள். திமுக போல் சொகுசான வாழ்க்கையை அண்ணா திமுக தொண்டர்கள் வாழவில்லை. உழைக்காமல் இருக்கும் உங்களுக்கு இவ்வளவு இருக்கின்றது என்றால் உழைத்துப் பிழைக்கும் எங்கள் அண்ணா திமுக தொண்டர்களுக்கு எப்படி வீரம் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். திமுகவின் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சப்போவதில்லை. கடந்த 8 மாதத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடைக்கின்றது. எங்கே பார்த்தாலும் கொலை கொள்ளை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் சைக்கிளில் சென்று டீக்கடையில் டீ சாப்பிட்டு பொழுதைப் போக்கிக் கொண்டு இருக்கின்றார். ஒரு பொம்மை முதலமைச்சர் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார். நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் அவரது சொந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்று விளாசினார்.
- ‘உன்னால் என்னால்’ விமர்சனம்சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் […]
- மணலியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாள ஆசாமிகள் கைது..!மணலியில் ஆன்லைன் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மணலியில் […]
- ஜியோ மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்கசென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!சென்னையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஜியோ நிறுவன மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்க […]
- மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பேர் பயணம்..!சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 4 மாதங்களை விட, மே மாதம் அதிகமான பயணிகள் பயணம் […]
- சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.சங்கரன்கோவில் […]
- “காவிஆவி நடுவுல தேவி ” படத்தின் டிரெய்லரைசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள ” காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் […]
- மேகதாது விவகாரத்தில் தி.மு.க – காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது..,ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு..!கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், […]
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..!கன்னியாகுமரியில் கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று […]
- நேர்த்தி என்பது நம்மிடம் இல்லை இயக்குநர் செல்வராகவன்‘என்.ஜி.கே’ படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.செல்வராகவன் […]
- நாயகி பேசும் வசனமே மிரட்டல்..!” – நாயகன் சித்தார்த் பாராட்டு!பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷின் எழுத்து, […]
- இன்று உலக பெற்றோர்கள் தினம்..!உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று […]
- இன்று இயந்திரங்களின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த..,நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் பிறந்த தினம்நடைமுறை இயந்திரங்களின் அடிப்படையாக உள்ள பெரும் புகழ் வாய்ந்த கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் […]
- சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில்..,அய்யனார் குதிரை எடுப்பு விழா..!மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் குதிரை எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. […]
- சமயநல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..!சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் […]
- குமரியில் அமைச்சரைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!பாரதப் பிரதமர் நரேந்தி மோடியை அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை […]