நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வரும் செவ்வாய்கிழமை 22-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்போதே மார்ச் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் மறைமுகத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், நகர்மன்ற துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவியிடங்களை குறிவைத்து திமுகவிடம் காய்நகர்த்த தொடங்கிவிட்டனர் அதன் கூட்டணிக் கட்சியினர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் 22-ம் தேதிக்கு பிறகு மார்ச் 3-ம் தேதி வரை பதவிகளை கேட்டு கூட்டணிக் கட்சிகள் பஞ்சாயத்தில் ஈடுபடும் என்பதை அறிந்த திமுக தலைமை, அதனை சமாளிக்க அமைச்சர் நேரு தலைமையில் குழு ஒன்றை அமைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் நேற்று ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் வரும் செவ்வாய்கிழமை 22-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதையடுத்து வெற்றிபெற்ற உறுப்பினர்களை கொண்டு மேயர், துணை மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சி சேர்மன் உள்ளிட்ட பதவியிடங்கள் மார்ச் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்படும். அதிமுக தனித்து போட்டியிட்டதால் இந்த விவகாரத்தில் அக்கட்சிக்கு சிக்கல் எதுவும் எழ வாய்ப்பில்லை.
ஆனால் திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லீம லீக், மனித நேய மக்கள் கட்சி என பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்ததால், மறைமுகத் தேர்தலின் போது இந்தக் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் பதவிகள் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் எந்தப் பதவி குறித்தும் கூட்டணிக் கட்சிகளிடம் திமுக தலைமை உறுதியளிக்கவில்லை என்பதும் தேர்தல் முடிந்தபிறகு பேசிக்கொள்ளலாம் என பதிலளித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவியிடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க திமுக தயாராக இல்லை என்றும் வேண்டுமானால் துணை மேயர் பதவியோ, நகர்மன்ற துணைத் தலைவர் பதவியோ குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கொடுக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி மார்ச் 3-ம் தேதி வரை பதவியிடங்களை பிரித்துக்கொள்வது தொடர்பாக பஞ்சாயத்து நடக்கலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே வாக்கு சதவீதம், கட்சிகளின் வாக்குவங்கி, தேர்தல் பணிகள், தேர்தல் செலவு, உள்ளடி வேலை பார்த்தவர்கள் விவரம் உள்ளிட்ட பல முக்கிய புள்ளி விவரங்களை திரட்டத் தொடங்கியுள்ள திமுக, இதனைக் கூட்டணிக் கட்சிகளிடம் விலாவாரியாக எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளதாம். மேலும் அமைச்சர்கள் நேரு, செந்தில்பாலாஜி, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றையும் 22-ம் தேதிக்கு பிறகு அமைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]