புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது . இந்த நிலையில் அதிகாரிகள் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் செய்து வருவதை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது நாள்தோறும் ஏறி வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை முன்னிட்டு எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் ஆட்சியர் இஷிதா ராட்டி காரைக்கால் நகரில் நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



