திமுக எம்எல் ஏக்கள் கூட தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என்று சொல்வார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு
48 ஆண்டுகால கடின உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எத்தகைய விமர்சனங்களையும் சிரிப்பால் எதிர்கொண்டு மக்கள் பணி ஆற்றுபவர் இபிஎஸ். தந்தை கைப்பிடித்து வந்த ஸ்டாலின் எங்கள் கட்சி பற்றி பேசுவது அழகல்ல உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் திமுக எம்எல்ஏக்கள் கூட தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் வேண்டும் என்று சொல்வார்கள் என்றார் .