நவம்பர் 27, மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், இன்று ஈரோட்டில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் சூரியம்பாளையம் பகுதியில் காது கேளாதோர் விடுதியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு எழுதுபொருள் மதிய உணவை வழங்கினார். மாவட்ட மாநகர மாநில பகுதி வட்ட கழக நிர்வாகிகள் உடன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியை லீலா மாணிக்கம் ஏற்ப்பாடு செய்திருந்தனர்.