

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுக்குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
“கர்நாடக துணை முதலமைச்சர். மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று கூறியது கண்டிக்கத்தக்கது கர்நாடக அரசின் வீண்பிடிவாதப் போக்கான மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்பை தெரிவிப்பதோடு அணைக்கட்ட அனுமதிக்க முடியாத நிலையில் செயல்பட வேண்டும். கர்நாடக துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று கூறியது கண்டிக்கத்தக்கது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டினால் காவிரி நீரினால் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தொழிலை இழக்க நேரிடும். மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு குடிநீராக கிடைக்கும் மேகதாது அணையின் காவிரி நீரும் கிடைக்காமல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும்.
இப்பேர்பட்ட சூழலில் மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சிப்பது நியாயமில்லை.அதுவும் ஆட்சிப்பொறுப்பேற்ற உடனேயே தமிழக விவசாயிகளின் உயிர்ப்பிரச்சனையான காவிரி நீர் தேவையை தடுக்கும் விதமாக அணைக்கட்டுவது குறித்து தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. கர்நாடக அரசின் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் நட்புறவுக்கு உகந்ததாக அமையாது. குறிப்பாக மேகதாது அணைக்கட்டுவது தொடர்பாக கர்நாடக மாநில அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வரும் வேளையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கர்நாடக காங்கிரஸ் மேகதாது சம்பந்தமாக வாக்குறுத்தி அளித்த போதே தமிழக தி.மு.க அரசும், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும்.
அதை விடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் போதும், காவிரி நீர் பற்றி கவலைப்படாமல் தமிழக அரசும், காங்கிரசும் அப்போது ஆதரவு தெரிவித்துவிட்டு இப்போது என்ன காரணம் சொன்னாலும் இப்பிரச்சனையில் தமிழக அரசும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே கர்நாடக அரசு, மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு கடும் கண்டிப்பையும், எதிர்ப்பையும் தெரிவிப்பதோடு, அணைக்கட்டும் பேச்சுக்கே இடம் கொடுக்காமல், அணைக்கட்ட அனுமதிக்க முடியாத நிலையில் செயல்பட்டு தமிழக விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
- உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம் 1கோடியே 7 லட்சத்தி 30,553 ரூபாய் வசூல் – கோவில் நிர்வாகம் தகவல்…!!!உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 11 … Read more
- உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி..,உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 255: நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,அல்கு பெரு நலத்து, அமர்த்த … Read more
- படித்ததில் பிடித்தது ஊக்கமூட்டும் பொன்மொழி 1. “தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள் இருக்கும்.. ஆனால் கடின உழைப்பால் இவை அனைத்தையும் … Read more
- பொது அறிவு வினா விடைகள்1. அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கு?ஆமை 2. எந்த விலங்கு அதிக இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளது? ஒட்டகச்சிவிங்கி … Read more
- குறள் 533பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு பொருள் (மு.வ): மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் … Read more
- தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பாக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார்..,பஞ்சாப் மாநில சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைப்பெற்ற ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பாக … Read more
- அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் கணித செயல்பாடு குறித்து, கல்வித்துறை இயக்குனர் முனைவர், க.அறிவொளி நேரடி ஆய்வு.மாணவர்களின் தனித்திறமையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் விதமாக தலா 100 ரூபாய் மற்றும் பேனா பரிசு வழங்கி … Read more
- தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்…தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத … Read more
- கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளரிடம் கோரிக்கை மனு..,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி … Read more
- குடிதண்ணீருடன் சாக்கடை தண்ணீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி..,சென்னை வேளச்சேரி கண்ணபிரான் தெருவில் கார்த்திகேயன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இந்த குடியிருப்பில் சுமார் 12 … Read more
- மதுரை வைகையாற்றில் அடையாளம் தெரியாத நபரை கொலை செய்தவர்களுக்கு போலீசார் வலை வீச்சு…மதுரையில் கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத … Read more
- மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி…திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, கே.ராஜதானி கோட்டை, சேர்ந்த துரைப்பாண்டி மாற்றுத்திறனாளி. இவரது விவசாய நிலத்திற்கு செல்லும் … Read more
- தென்கரை ஊராட்சியில் தீவிர டெங்கு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை..,மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் தென்கரை ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர டெங்கு தடுப்பு … Read more
- BSNL சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவியப்போட்டி…மதுரையில் அக்டோபர் 1 BSNL தினத்தை முன்னிட்டு, மதுரை BSNL சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான … Read more