• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சிலம்பாட்டம் ஆடி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் எஸ்.டி.சாமிநாதன்..,

வேடசந்தூர் அருகே பொதுமக்கள் முன்னிலையில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பாட்டம் ஆடி அசத்தி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் வாக்கு சேகரித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதில் பொது மக்களை கவர்வதற்காக வேட்பாளர்கள் டீக்கடைக்கு சென்று டீ வாங்கி குடிப்பது, வயல்களில் புகுந்து தொழிலாளர்களுடன் விவசாய பணியில் ஈடுபடுவது, குளத்தில் இறங்கி பொதுமக்களின் துணிகளை துவைத்து கொடுப்பது என்று உள்ளிட்ட பல்வேறு வகையில் வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் குஜிலியம்பாறை தாலுகா பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு கொளுத்தும் வெயிலில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

இதில் பாளையம் பேரூராட்சி கொல்லப்பட்டியில் பொதுமக்கள் முன்னிலையில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பாட்டம் வீரருடன்
திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் சிலம்பாட்டம் சுழற்றி சுழற்றி ஆடி அடித்து அசத்தினார். சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பிறகு திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

உடன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சீ.வெ.கிருஷ்ணன், குஜிலியம்பாறை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சு.சீனிவாசன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் எரியோடு பெ.ஜீவா, பாளையம் பேரூர் கழக செயலாளர் அண்ணன் கதிரவன், பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிசாமி, காங்கிரஸ் வட்டார தலைவர் வி.தர்மர், திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கோபி,குஜிலி மனோஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.