சிவகாசி அருகே, மாநகராட்சியில் வாரிசு வேலை பெறுவதில் ஏற்பட்ட தகராறில் 2 பெண்கள் படுகொலை…
கொலையாளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் வசித்து வந்தவர் முருகேஸ்வரி (50). இவரது மகன் ரவி, சிவகாசி மாநகராட்சியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். ரவிக்கு திருமணம் நடந்து ரதிலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரவி, திடீரென்று இறந்து போனார். இந்த நிலையில், மாநகராட்சியில் கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணியை பெறுவதற்காக ரதிலட்சுமி, தனது மாமியார் முருகேஸ்வரியிடம் வாரிசு சான்றிதழில் கையெழுத்து போட்டுத் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த முருகேஸ்வரி, கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணியை தனது பேரன் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று கூறி வந்தார். இதனால் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
ரதிலட்சுமிக்கு ஆதரவாக அவரது சகோதரர் காளிராஜன் பேசி வந்தார். இன்று காலை அதே பகுதியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் வைத்து இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காளிராஜன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகேஸ்வரியை சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க முயன்ற இவர்களது உறவினர் கருப்பாயிதமயந்தி (60) என்ற மூதாட்டியையும் காளிராஜன் கத்தியால் குத்தினார். கத்தி குத்தில் படுகாயமடைந்த இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட காளிராஜன், திருத்தங்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று முருகேஸ்வரி, கருப்பாயிதமயந்தி உடல்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருணை அடிப்படையில் கிடைக்கும் வேலைக்காக, குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டு அதனால் இரண்டு பெண்கள் படுகொலையான சம்பவம், சிவகாசி பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]