விஜய், ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ஷாம் ஆகியோர் நடித்துள்ளவாரிசு திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அப்படம் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்தன ஊடகங்கள் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது பொதுவாக சினிமா சம்பந்தபட்ட விழாக்களுக்கு சினிமா பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி, இணைய தள செய்தியாளர்களுக்கு அழைப்பிதழும் நிகழ்ச்சிக்கான பாஸ் வழங்கப்படுவது வழக்கம் ஆனால் நேற்றைய நிகழ்ச்சிக்கு வழங்கப்படவில்லை
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள்,சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பாக கூடிய சினிமா விழாக்களுக்கு நீண்டகாலமாக இந்த ஊடக தர்மம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான அனுமதி அழைப்பிதழ் ஒன்று 2000 ம் ரூபாய் முதல் 20,000 ம் வரை விலைபோனது தமிழகத்தில் உள்ள சில முன்னணி ஊடகங்கள் வாரிசு இசை வெளியீட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் வெளியிடுவதற்காக நுழைவு சீட்டை விலைக்கு வாங்கி தங்களது உளவாளிகளை நிகழ்ச்சிக்கு அனுப்பினார்கள் இன்று அதிகாலை வரை இசை வெளியீட்டு விழா செய்திகள் இணையத்தில் பரவிக் கிடக்கிறது.
இதைத்தான் தயாரிப்பாளரும், சன் தொலைக்காட்சி தரப்பில் எதிர்பார்த்ததாகவும் எதிர்பார்த்ததை காட்டிலும் செய்திகள் அதிகமாக வெளியானது என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.வாரிசு படம் பற்றிய அறிவிப்பு வெளியானது முதல் இன்றுவரை ஊடகங்களில் அப்படம் பற்றிய பரபரப்பு செய்திகள் தொடர்ந்து வர தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜ் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார். தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இல்லாமல் அதிக திரையரங்குகளில் படத்தை ரீலீஸ் செய்ய முடியாது என்பது தெரிந்தும் படத்தின் தமிழக உரிமையை விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிப்பவரும் அவருக்கு நம்பிக்கைக்குரிய லலிக்குமாரை வாங்க வைத்தார்.
ரெட் ஜெயண்ட் உடன் நெருக்கமான வணிகஉறவில் இருக்கும் லலித்குமார் தமிழக உரிமையை வாங்குவார் என்பது எதிர்பாராதது ஏனென்றால் ரெட் ஜெயண்ட் மூவீஸ் துணிவு படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதால் வாரிசு படத்திற்கு அதிகமான திரையரங்குகள் கிடைக்காது என்பது தெரியும் அதனை எளிதாக சமாளிக்ககூடியவர் மாஸ்டர் படத்தின் தயாரிப்பு, வெளியீட்டை கொரோனா நெருக்கடியில் பதட்டமின்றி சமாளித்தவர் லலித்குமார் அதனால்தான் வாரிசு படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை அவரிடம் வழங்கினார். தில்ராஜு தனியார் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் ஒன் நடிகர் அவர் நடித்துள்ள வாரிசு படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை இது சம்பந்தமாக உதயநிதியை சந்தித்து பேச உள்ளேன் என்று கூறும் வரை தமிழ்நாட்டில் “துணவு” படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் என்கிற நிலை இருந்தது. ஆனால் அவரது பேட்டிக்கு பின் எல்லாமே மாறியது ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு தமிழகத்தில் உள்ள 9 விநியோக மாவட்டங்களில் ஐந்து பிரதான விநியோக மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வேலூர், பாண்டிச்சேரிஆகிய பகுதிகளில் திரையரங்கை ஒப்பந்தம் செய்யும் பொறுப்புரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற் க்கு வழங்கப்பட்டது அதனால் மற்ற மாவட்டங்களானமதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மாவட்டங்களிலும் வாரிசு படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்க காரணமானது.ரெட் ஜெயண்ட் மூவீசுடன் லலித்குமாருக்கு சுமுக வணிக உறவு இருப்பதால் இதனை சாத்தியமாக்கினார் தில்ராஜு
விஜய் மனம் குளிர அவர் கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை பரிசாக சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தி விஜய்கால் சீட் ஒன்றையும் பெற்று விட்டார் அதனால்தான் ” வாரிசுக்கு வாழ்த்துகள் வாரிசு – 2 எப்போது என தில்ராஜீவை பார்த்து விஜய் கேட்டுள்ளார் அரசியல் சதுரங்க விளையாட்டுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் “வாரிசு” படத்தின் மூலம் சினிமா வியாபார அரசியலை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ளார் தில் ராஜீ
- ஐஸ்கிரீம் கோன் போல் டீ, காபி கப்..,
ஆசிரியையின் அசத்தலான தயாரிப்பு..!ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தண்ணீர் மற்றும் டீ, காபி பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தினால் அது […] - காஷ்மீரில் கொட்டும் பனியில் கர்ப்பிணியை தோளில் சுமந்து சென்ற ராணுவவீரர்கள்..!ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவின் காரணமாக, நிறைமாத கர்ப்பிணியை மருத்துவ சிகிச்சைக்காக ராணுவ […]
- பழனி அரசு மருத்துவமனையில்..,
தூய்மைப்பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் […] - சிந்தனை கருத்தாளர் விருது பெற்ற மதுரை மாணவிக்கு பாராட்டு விழாமதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் […]
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]
- பொது அறிவு வினா விடைகள்
- சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரைநாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா […] - கிராமி விருது விழாவில் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்த இந்தியப் பெண்..!அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய இசைக் கலைஞர் அனெட்பிலிப் காஞ்சிபுரம் பட்டுடுத்தி […]